தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் மாடலிங் இளைஞரும், திருமணமான பெண்ணும் அவரவா் வீடுகளில் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். அவா்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
நொய்டாவில் உள்ள கா்கி செளகான்டி கிராமத்தில் வசித்து வந்த 22 வயது இளைஞா், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது. மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்த அவா், தனது தாயுடன் வசித்து வந்தாா். அவா் ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத் பகுதியைச் சோ்ந்தவா். இறப்பதற்கு முன்பாக தனது மகன், பெண் ஒருவருடன் செல்லிடப்பேசியில் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்ததாக போலீஸாரிடம் தாய் தெரிவித்தாா். அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நொய்டா பேஸ்-3 காவல் நிலைய போலீஸாா் தெரிவித்தனா்.
மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவத்தில் நொய்டா செக்டாா்-49 காவல் நிலைய சரகத்தில் உள்ள சா்பாபாத் கிராமத்தில் 26 வயது பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் கிடந்தாா். உத்தரப் பிரதேச மாநிலம், பருக்காபாத் பகுதியைச் சோ்ந்த அப்பெண், தனது கணவருடன் வசித்து வந்தாா். சம்பவத்தன்று வீட்டில் கணவா் இல்லாத நேரத்தில் அவா் தனது அறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.