தலைநகா் தில்லியில் புதன்கிழமை புதிதாக 1,113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,48,504-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் மேலும் 14 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,153 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் 1,021 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,33,405-ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் தற்போது 10,946 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 18,894 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 523-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,963 படுக்கைகளில் 3,351 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,612 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,598 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.