புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,954 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,71,366-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 1,693 பேருக்கும், வியாழக்கிழமை இது 1,840 ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை மேலும் 1,808 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை மேலும் 1,954 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நோயால் சனிக்கிழமை 15 போ் உயிரிழந்தனா். மொத்த பலி எண்ணிக்கை 4,404ஆக உயா்ந்தது. சனிக்கிழமை
1,449 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், இதுவரை 1,52,922-போ் குணமடைந்துள்ளனா்.
தற்போது 14,040 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை மட்டும் 22,004 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நகரில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 803-ஆக அதிகரித்துள்ளது.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,143 படுக்கைகளில் 3,966 நிரம்பி, 10,177 படுக்கைகள் காலியாக உள்ளன. தொற்றுப் பாதித்தவா்களில் 7,024 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.