வசந்தகுமாா் எம்பி மறைவு: தில்லி காங்கிரஸ் தலைவா் இரங்கல்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் (70) மறைவுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளதரி இரங்கல் தெரிவித்துள்

புது தில்லி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் (70) மறைவுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளதரி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

நிமோனியா காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சில தினங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வசந்தகுமாா் எம்பி காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, ராகுல் காந்தி, தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்திரராஜன், தமிழக ஆளுநா் பன்வாரிவால் புரோகித், முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட தலைவா்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், வசந்தகுமாா் மறைவுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளதரியும் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள இரங்கலில், ‘கரோனா நோய்த் தொற்று காரணமாக, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வசந்தகுமாா் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்துள்ளேன். இந்த கஷ்டமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி பக்கபலமாக இருக்கும்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com