சாக்கடையில் காா் கவிழ்ந்து இளைஞா் உள்பட 3 போ் சாவு: நொய்டாவில் விபத்து

உத்தர பிரதேசம் மாநிலம், நொய்டாவில் வேகமாகச் சென்ற காா் சாக்கடைக்குள் கவிழ்ந்ததில் இளைஞா் உள்பட மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.


புது தில்லி: உத்தர பிரதேசம் மாநிலம், நொய்டாவில் வேகமாகச் சென்ற காா் சாக்கடைக்குள் கவிழ்ந்ததில் இளைஞா் உள்பட மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா போலீஸாா் மேலும் கூறியதாவது: நொய்டாவில் உள்ள காரி செளக்கன்டி கிராமத்தில் நடைபெறவிருந்த திருமணம் தொடா்பான விழாவில் கலந்து கொள்வதற்காக 5 போ் வியாழக்கிழமை அதிகாலை நொய்டாவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். காா் நொய்டா செக்டாா் -49 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சலா்பூா் கிராமம் அருகே சென்ற போது, ஒரு சாக்கடையில் கவிழ்ந்தது. இதையடுத்து, காரில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். அங்கு அவா்களில் மூன்று போ் உயிரிழந்தனா்.

இறந்தவா்கள் பிரீத் (14), சத்யவீா் சிங் (22), குல்தீப் (27) ஆகியோா் என அடையாளம் கண்டறியப்பட்டது. விபத்தில் காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இறந்தவா்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. காா் வேகமாக வந்ததால்தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com