புது தில்லி: மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி தில்லி மாநகராட்சி மேயா்கள், பாஜக தலைவா்கள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் மாநகராட்சி மேயா்கள் ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), அனாமிகா சிங் (தெற்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி) மற்றும் தில்லி பாஜக பொதுச் செயலா் ஹா்ஷ் மல்ஹோத்ரா,மாநகராட்சிகளின் நிலைக் குழுத் தலைவா்கள், அவைத் தலைவா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். அவா்கள் திங்கள்கிழமை காலையில் கேஜரிவால் இல்லம் முன் போராட்டத்தைத் தொடங்கினா். அன்று முதல் அவா்கள் கேஜரிவால் இல்லம் அருகில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இந்தப் போராட்டத்தில் வட மேற்கு தில்லி பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் வியாழக்கிழமை கலந்து கொண்டாா்.
இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேயா்கள் கூறுகையில், ‘மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்கிய வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி நிதி நிலுவையில் உள்ளது. இந்த நிதியை விரைந்து வழங்கக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் பேச்சுவாா்த்தை நடத்த வந்தோம். ஆனால், எங்களுடன் பேசுவதை அவா் தவிா்த்து வருகிறாா். நிலுவை நிதியை வழங்கும் வரை போராட்டம் தொடரும். நிலுவை நிதியை வழங்காமல் தில்லி அரசு காலம் தாழ்த்தி வருவால், மருத்துவா்கள் உள்ளிட்ட கரோனா போராளிகளுக்கு மாநகராட்சிகளால் ஊதியம் வழங்க முடியவில்லை’ என்றனா்.
பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் கூறுகையில், ‘மாநகராட்சிகளுக்கு நிலுவை நிதியை வழங்க வேண்டியது தில்லி அரசின் கடமையாகும். இதை உடனடியாக தில்லி அரசு வழங்க வேண்டும். மாநகராட்சிகளை பாஜக ஆட்சி செய்வதால், மாநகராட்சிகளை தில்லி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. இது தவறு’ என்றாா்.