சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

நொய்டா சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகிலுள்ள சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


புது தில்லி: நொய்டா சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகிலுள்ள சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நொய்டா காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று நொய்டா சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகிலுள்ள சாக்கடையில் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு போலீஸாா் அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு சென்ற அவா்கள், சுமாா் 32 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்றை சாக்கடையில் இருந்து மீட்டனா். அவரை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து நொய்டா ஃபேஸ்-2 காவல் நிலையத்தில் விசாரணைநடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com