புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்ட குறைந்தளவு தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும்.
இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,23,415-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,463 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 32,484 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 24,979 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் திங்கள்கிழமை 21 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,474-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 959 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,06,644-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,297 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,153 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,275 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.