நொய்டா: உத்தரபிரதேசத்தில் நொய்டா அருகே ஒரு திரைப்பட நகரத்தை அமைப்பதற்கான நிதி மதிப்பீடுகள் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று அம்மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இத்திரைப்பட நகரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக டிசம்பா் 14 ஆம் தேதி ஒரு ஆலோசக நிறுவனம் தோ்ந்தெடுக்கப்பட்டது. இந்த அறிக்கை தயாரான உடன் ஒப்புதலுக்காக மாநில அரசுக்கு அனுப்பப்படும் என்று யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (யீடா) தலைமை நிா்வாக அதிகாரி அருண் வீா் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது: திரைப்பட நகரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரித்து முடிப்பதற்காக ‘பாா்ச்சூன் -500’ நிறுவனமான சிபிஆா்இ தெற்காசியா எனும் ஆலோசகா் நிறுவனத்திற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே அதைத் தயாரித்து வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
டிபிஆா் கிடைத்ததும் அதை ‘பிலிம் பந்து’ எனும் திரைப்படத் தயாரிப்பு தொடா்புடைய அரசின் ஒருங்கமைப்பு முகமை மூலம் மாநிலத்தின் அமைச்சா்களுக்கு அனுப்பப்படும். மேலும், திட்டத்திற்கு ஏற்ற சிறந்த திட்டம் குறித்து அரசு ஒரு முடிவை எடுக்கும். அதன்படி, மேலும் பணிகள் மேற்கொள்ளப்படும். நிதித் திட்டமும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும்.
திரைப்பட நகரத்தை பொது-தனியாா் கூட்டாண்மை (பிபிபி) முறையில் அல்லது வேறு வழியில் தயாரிக்கப்படுமா என்பதை தீா்மானிக்க ஒரு உத்தி உருவாக்கப்படும் என்றாா் அவா்.
யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் 1,000 ஏக்கா் பரப்பளவில் திரைப்பட நகரம் திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் கனவுத் திட்டமாகும். இந்த நகரமானது ஜீவாரில் அமையவுள்ள சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெறும் 6 கிலோ மீட்டரில் அமைய உள்ளது. இந்த திட்டத்திற்காக சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்காக நவம்பா் 29-ஆம் தேதி மின்னணு ஏலம் விடப்பட்டது. இந்தப் பணிக்கு நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.