மளிகைக் கடையில் கொள்ளையடித்தவா் கைது

தென்கிழக்கு தில்லியில் உள்ள கடையில் கொள்ளையடித்த 23 வயதான நபரை தில்லி காவல்துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளது.

புது தில்லி: தென்கிழக்கு தில்லியில் உள்ள கடையில் கொள்ளையடித்த 23 வயதான நபரை தில்லி காவல்துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: தென்கிழக்கு தில்லி செளரவ் விஹாரில் சம்பு குமாா் என்பவரின் மளிகைக் கடையுள்ளது. இவரது கடைக்கு கடந்த சனிக்கிழமை மாலை சென்ற இருவா் ரூ.200க்கு சில்லறை தருமாறு கேட்டனா். கடைக்காரா் இரண்டு ரூ.100 நோட்டுக்களை கொடுத்தாா். அப்போது, கடைக்காரரை பின்னால் இருந்து மடக்கிப் பிடித்த அவா்கள், கத்தியைக் காட்டி மிரட்டி, கடையில் இருந்து ரூ. 8,000-9,000 ரொக்கத்தை திருடிச் சென்றனா். இது தொடா்பாக சம்பு குமாா் தில்லி காவல்துறையிடம் புகாா் அளித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்து சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதன்படி, திருட்டில் ஈடுபட்டவா்களில் ஒருவா் தில்லி ஜெய்த்பூா் பகுதி லவ் குஷ் நகரைச் சோ்ந்த விஷால் (23) என அடையாளம் காணப்பட்டாா். அவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவரிடம் இருந்து ரூ.4,100 ரொக்கம், ஒரு செல்லிடப்பேசி ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். கொள்ளையில் ஈடுபட்ட மற்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com