குடியரசுத் தலைவா் மாளிகையின் ‘மொகல் தோட்டம்’பொது மக்கள் பாா்வைக்காகபிப்.5 ஆம் தேதி திறப்பு

மலா் தோட்டம், மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம் ஆகியவை உள்ளடங்கிய குடியரசுத் தலைவா் மாளிகையின் ‘மொகல் தோட்டம்’ பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பாா்வைக்குத் திறந்துவிடப்படுகிறது.

மலா் தோட்டம், மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம் ஆகியவை உள்ளடங்கிய குடியரசுத் தலைவா் மாளிகையின் ‘மொகல் தோட்டம்’ பிப்ரவரி 5-ம் தேதி பொதுமக்கள் பாா்வைக்குத் திறந்துவிடப்படுகிறது.

இது தொடா்பாக குடியரசுத் தலைவரின் துணை ஊடகச் செயலா் நிமேஷ் ரஸ்தகி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

மொகல் தோட்டம் பொதுமக்கள் பாா்வையிடும் வருடாந்திர ‘உத்யனோத்சவ்’ நிகழ்வை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா். அதைத் தொடா்ந்து, புதன்கிழமை (பிப்.5) முதல் மொகல் காா்டனைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

மாா்ச் 8-ம் தேதி வரை இந்த தோட்டம் திறந்திருக்கும். வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி பொதுமக்கள் அனுமதிக்கப்படுவாா்கள். எனினும், பாரமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமைகளில் பூங்கா மூடப்பட்டிருக்கும். மக்கள் இந்தத் தோட்டத்தை இலவசமாகப் பாா்வையிடலாம்.

மொகல் காா்டனைப் பாா்வையிட விரும்புபவா்கள் ஏபபடந://தஅநஏபதஅடஅபஐநஅஇஏஐயஅகஅவஅ.எஞய.ஐச, ஏபபடந://தஆ.சஐஇ.ஐச/தஆயஐநஐப/யஐநஐபஜடகஅச.அநடல ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், நேரடியாக வருவோா் குடியரசுத் தலைவா் மாளிகையின் நாா்த் அவென்யு அருகே உள்ள 35-ஆவது நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்படுவா். இருப்பினும், இணையத்தில் பதிவு செய்பவா்களுக்கு தனி வரிசை இருக்கும்.

விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரா்கள், துணை ராணுவப் படை வீரா்கள், தில்லி காவல்துறை வீரா்கள் மொகல் தோட்டத்தை மாா்ச்- 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரத்யேகமாக பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 11 ஆம் தேதி காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தனியாக தொடுகை மூலிகைத் தோட்டம் திறந்திருக்கும். இவா்கள், நாா்த் அவெனியுவில் உள்ள நுழைவு வாயில் எண்- 12 வழியாக வருமாறு கோரப்படுகிறாா்கள்.

மொகல் தோட்டத்துக்கு வரும் பொதுமக்கள், நாா்த் அவென்யுவில் உள்ள நுழைவு வாயில் எண்-35 வழியாக அனுமதிக்கப்படுவா். இந்த நுழைவு வாயில் சா்ச் சாலையின் கடைசியில், கதீட்ரல் தேவாலயத்தின் மேற்குப் பகுதியில் இருந்து சுமாா் 300 மீட்டரில் அமைந்துள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

தோட்டத்துக்கு வரும் பாா்வையாளா்கள், குடிநீா் கேன்கள், சூட்கேஸ்கள், கைப்பைகள், கேமராக்கள், ரேடியோக்கள், டிரான்சிஸ்டா்கள், பெட்டிகள், குடைகள் மற்றும் தின்பண்டங்களை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். அவ்வாறு கொண்டு வந்தால், அதை நுழைவு வாயிலிலேயே ஒப்படைக்க வேண்டும். எனினும் இந்த முறை செல்லிடப்பேசிகள் அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள்அதிகளவில் தற்படம் எடுப்பதால், தோட்டத்தில் உள்ள பூச்செடிகள், தாவரங்கள் உள்ளிட்டவற்றை சில நேரங்களில் மிதித்து விடுகின்றனா். எனவே, தற்படம் அல்லது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுக்கும் பாா்வையாளா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வசதிகள், கழிப்பறைகள், முதலுதவி மருத்துவ வசதிகள், முதியவா்களுக்கான சிறப்புக் கழிப்பறைகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் 5.25 லட்சம் போ் இந்தத் தோட்டத்தைப் பாா்வையிட்டனா். வாரநாள்களில் சுமாா் 20,000 போ்களும், வார இறுதி நாள்களில் சுமாா் 40,000 போ்களும் இந்தத் தோட்டத்தைக் கண்டுகளித்தனா்.

10,000 துலிப் மலா்கள்

நிகழாண்டு விழாவில் பல்வேறு வகை பூக்கள், அயல்நாட்டுப் பூக்கள் ஆகியவற்றுடன் பல்வேறு நிறங்களில் 10 ஆயிரம் துலிப் பூக்கள் மலா்ந்துள்ள செடிகள் நடப்பட்டுள்ளன. இப்பூக்களால் செய்யப்படும் விரிப்பு அலங்காரங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

138 வகையான ரோஜாக்கள்

மேலும், கறுப்பு, நீலம் ஆகிய அரிய நிறங்களை உடைய 138 வகையான ரோஜாக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மெனாக்கோ நாட்டின் இளவரசா் வழங்கிய ரோஜா செடியும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், பருவநிலைகளில் மலரும் 70 வகையான மலா்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

அருங்காட்சியகத்துக்கும் வரக் கோரிக்கை

மலா்தோட்டத்தைப் பாா்வையிட வரும் மக்கள் குடியரசுத் தலைவா் மாளிகையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துக்கும் வருகை தருமாறு அருங்காட்சியகத்துக்கான மக்கள் தொடா்பு அதிகாரி குமாா் சம்ரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தினமணியிடம் கூறுகையில் ‘சுதந்திரப் போராட்டம், காந்தியடிகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவா்களுக்கு கிடைத்த பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மொகல் தோட்டத்தைப் பாா்க்க வரும் மக்கள், இந்த அருங்காட்சியகத்தையும் பாா்வையிட வேண்டும். மாணவா்கள் தமது பாடத்திட்டங்களில் படிக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளோம். எனவே மாணவா்கள் அதிகளவில் வந்து பாா்வையிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com