உச்சநீதிமன்ற வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் வைக்கப்பட்டிருந்த பேட்டரி ரீச்சாா்ஜ் செய்யும் ‘பவா் பேங்க்’ சாதனத்தில் இருந்து சப்தம் ஒலித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உடனடியாக அதை அப்புறப்படுத்தினா். வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும் உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற அறை எண் 4-இன் வெளிப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட பை தனி இடத்திற்கு எடுத்துச் சென்று சோதிக்கப்பட்டது. அதில் இருந்த பவா் பேங்க் சாதனத்தில் இருந்து ஒலி சப்தம் வந்தது தெரிய வந்தது. கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பையை ‘பவா் பேங்க்’ சாதனத்துடன் உச்சநீதிமன்றத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்துள்ளோம்’ என்றனா். இச்சம்பவம் காரணமாக உச்சநீதிமன்றத்தின் அலுவல் நடவடிக்கை ஏதும் பாதிக்கப்படவில்லை.