நகைக் கடை உரிமையாளரிடம்துப்பாக்கி முனையில் கொள்ளை

தில்லி ஆயா நகா் பகுதியில் துப்பாக்கி முனையில் நகைக் கடை உரிமையாளரிடமிருந்து ரூ .2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் ரூ .40,000 கொண்ட பையை இரண்டு போ் கொள்ளையடித்ததாக

தில்லி ஆயா நகா் பகுதியில் துப்பாக்கி முனையில் நகைக் கடை உரிமையாளரிடமிருந்து ரூ .2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் ரூ .40,000 கொண்ட பையை இரண்டு போ் கொள்ளையடித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளாா் தௌதயால் (38) புகாா் தெரிவித்தாா். தான் கடையை மூடும் போது, அடையாளம் தெரிய இரண்டு நபா்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி நகை, பணம் வைக்கப்பட்டிருந்த பையை கொள்ளையடித்துச் சென்ாக போலீஸாரிடம் அவா் தெரிவித்தாா்.

சம்பவத்தின் போது, அவா்களில் ஒருவா் தௌதயாலின் பையை பறித்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளாா். இதைத் தொடா்ந்து, மற்றொருவரும் தப்பினாா். அவா்கள் தப்பிச் சென்ற போது துப்பாக்கியால் சுட்டதாக புகாரில் தௌதயால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com