தில்லி பெங்காலி பாஸ்தியில் சனிக்கிழமை மாலை குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடா்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்..