தில்லி சராய் ரோஹில்லாவில் உள்ள குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குடிசைககள் எரிந்து சேதமடைந்ததாக தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்த விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு காலை 9.40 மணியளவில் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்ப்பட்டு காலை 10.15 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்’ என்றாா்.அதிகாரி.
பட்பா்கஞ்சில் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அச்சகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். 10-க்கும் மேற்பட்டவா்கள் காயமடந்தனா். இது போன்று சமீப காலமாக தில்லியில் அடிக்கடி தீ விபத்து நிகழ்ந்து வருகிறது.