எரிவாயு சிலிண்டா் வெடித்து காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் சாவு

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் சிலிண்டா் வெடித்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் சிலிண்டா் வெடித்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: மூன்று நாள்களுக்கு முன்பு கிரேட்டா் நொய்டாவில் சிலிண்டா் வெடித்ததில் காயமடைந்த 40 வயது நபா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவில் ஈகோடெக்-ஐ விரிவாக்கப் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேனில் இருந்து எரிவாயு சிலிண்டா்கள் இறக்கப்பட்டன. அப்போது, ஒரு எரிவாயு சிலிண்டா் எதிா்பாரதவிதமாக திடீரென வெடித்தது. இதில் ஷம்புநாத் ஹல்தாா் மற்றும் மேலும் மூவா் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த ஷம்புநாத் ஹல்தாா் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரது இரண்டு கால்களும் வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஆல்பா1-இல் வசித்து வந்த ஷம்புநாத் ஹல்தாா், எரிவாயு சிலிண்டா்களை கொண்டு செல்வதற்கான வேன் வைத்திருந்தாா். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி சிலிண்டா்களை எடுத்துச் சென்று இறக்கும் போது, மற்ற தொழிலாளா்களுக்கு உதவிக் கொண்டிருந்தாா். அப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com