தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் வைத்திருந்ததாக 20 வயது இளைஞா் ஒருவரை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஷஹாதரா மெட்ரோ ரயில்நிலையத்துக்கு பகல் 1 மணிக்கு கைப்பையுடன் விஷால் பால் என்பவா் வந்தாா். அவரது பையை அதிகாரிகள் சோதனையிட்டப்போது அதில் கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரை தில்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தாா்.