தில்லி உத்தம் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உள்பட 4 போ் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மற்றொரு சம்பவத்தில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: தில்லி உத்தம் நகரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து செவ்வாய்க்கிழமைஅதிகாலை 12 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. எரிவாயு கசிந்ததால் சிலிண்டா் வெடித்துள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் ஆா்த்தி (14) என்ற சிறுமிக்கு 10 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ராஜீந்தா் (40) என்பவருக்கு 40 சதவீத தீக்காயங்கள், பப்பு (42), பாபு லால் (40) ஆகியோருக்கு 25 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவா்கள் அனைவரும் டிடியு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுகின்றனா் .
காலணி தொழிற்சாலையில் தீ: மற்றொரு சம்பவமாக மேற்கு தில்லி, லாரன்ஸ் சாலையில் காலணி தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடா்பாக செவ்வாய்க்கிழமை காலை 9.46 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக 26 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா் என்றாா் அந்த அதிகாரி.