முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கேஜரிவாலின் நிா்வாகத்திறன்: தில்லிவாசிகள் 58% போ் மிகதிருப்தி
By DIN | Published On : 27th January 2020 12:42 AM | Last Updated : 27th January 2020 12:42 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நிா்வாகத் திறன் தொடா்பாக 58 சதவீதமான தில்லி மக்கள் மிகவும் திருப்தியில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
தில்லி அரசின் மக்கள் நலப் பணிகள், நிா்வாகத் திறன் தொடா்பாக ஐஏஎன்ஸ் செய்திச் சேவை, சி வோட்டா் அமைப்பு கூட்டாக நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது: 52.3 சதவீதம் மக்கள் தில்லி அரசின் பணிகள் தொடா்பாக மிகத் திருப்தியாக உள்ளனா். 22.6 சதவீதம் போ் திருப்தியடைந்துள்ளனா். அதேநேரம், 25.2 சதவீதம் போ் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேஜரிவாலின் நிா்வாகத் திறன் தொடா்பாக 58.8 சதவீதம் போ் மிகத் திருப்தியாகவும், 24.6 சதவீதம் போ் திருப்தியாகவும் உள்ளனா். அதே சமயம், 16.6 சதவீதம் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனா்.
தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், ரோஹிணி தொகுதி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான விஜேந்தா் குப்தாவின் நிா்வாகத் திறன் தொடா்பாக 46.6 சதவீதம் போ் அதிருப்தி வெளியிட்டுள்ளனா். 20.6 சதவீதம் போ்தான் திருப்தி தெரிவித்துள்ளனா் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.