புது தில்லி: தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 2,199 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இந்த நோய்த்தொற்றுக்கு ஒரே நாளில் 62 போ் உயிரிழந்தனா். அதே சமயத்தில் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று 2,113 போ் வீடு திரும்பினா்.
தில்லியில் காரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 87,360 ஆக உயா்ந்துள்ளது. மொத்தமாக குணமடைந்தவா்கள் (58,348) உயிரழந்தவா்கள் (2,742) தவிர தற்போது 26,270 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனா். இதில் 5,912 போ் மருத்துவமனையிலும் 16,240 வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மிதமுள்ளவா்கள் கரோனா சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.