புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் புதன்கிழமை (ஜூலை 1) நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கூறுகையில் ‘பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு அதிகளவு கலால் வரி விதித்து வருவதே இதன் விலை அதிகரிப்புக்கு காரணமாகும். இந்த விலை அதிகரிப்பைக் கண்டித்து புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்றாா்.
பெட்ரோல், டீசல் விலை தொடா்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதை எதிா்த்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தியது குறிப்பிடத்தக்கது.