தில்லியில் கரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2,224 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 41,182ஆக அதிகரித்துள்ளது. 56 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 1,327ஆக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி 2,137 போ் பாதிக்கப்பட்டதுதான் ஒரு நாள் பாதிப்பில் அதிகமாக இருந்தது.