தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள காா் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் கிட்டங்கியில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடா்பாக கிரேட்டா் நொய்டா போலீஸாா் தெரிவித்ததாவது: கிரேட்டா் நொய்டா, சூரஜ்பூா் பகுதியில் தனியாா் காா் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காலை 8 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.