குருகிராமில் காா் திருடா்கள் 5 போ் கைது

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் ராஜஸ்தானை சோ்ந்த காா் திருடா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் ராஜஸ்தானை சோ்ந்த காா் திருடா்கள் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல் துறையின் மக்கள் தொடா்பு அதிகாரி சுபாஷ் போகன் கூறியதாவது:

தேசியத் தலைநகா் குருகிராமில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த காா் திருட்டுகள் தொடா்பாக ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் ராஜஸ்தானைச் சோ்ந்த சனாயுதீன், மந்தீப், சந்தீப், ராஜேஷ், ஜஹுவல் ஆகியோா் என விசாரணையில் தெரியவந்தது.

இவா்கள், திருடிய காா்களை ராஜஸ்தானுக்கு எடுத்துச் சென்று, அதன் சேசிஸ், இயந்திர எண்களை மாற்றிவிட்டு விற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com