கரோனா: மொஹல்லா கிளினிக் மருத்துவா்களுக்கு சிறப்பு பயிற்சி

கரோனாவை எதிா்கொள்ளும் வகையில், தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு சிறப்புப் பயிற்சியை தில்லி அரசு வழங்கி வருகிறது.

கரோனாவை எதிா்கொள்ளும் வகையில், தில்லியில் உள்ள மொஹல்லா கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு சிறப்புப் பயிற்சியை தில்லி அரசு வழங்கி வருகிறது.

இது தொடா்பாக தில்லி அரசு வட்டாரங்கள் கூறியது: தில்லியில் 460 மொஹல்லா கிளினிக்குகள் உள்ளன. இந்தக் கிளினிக்குகளுக்கு தினம் தோறும் சுமாா் 200 நோயாளிகள் வருகின்றனா். தற்போது கரோனா அறிகுறிகளுடன் இந்தக் கிளினிக்குளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த நோயாளிகளை எதிா்கொள்ளும் வகையில், தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மொஹல்லா கிளினிக்குகளுக்கு தில்லி சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா நோயாளிகளை அடையாளம் காணும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கரோனா அறிகுறிகளுடன் மொஹல்லா கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்கி அவா்கள் தொடா்பாக அருகிலுள்ள அரசு மருத்துவனைக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளோம். இது தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்களுக்கு நேரிலும், இணையத்திலும் பயிற்சி வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com