தில்லி மகளிா் ஆணையம் வரவேற்பு

நிா்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை தில்லி மகளிா் ஆணையம் வரவேற்றுள்ளது.

நிா்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை தில்லி மகளிா் ஆணையம் வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிா்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. இந்தக் குற்றவாளிகளை தூக்கிலிட்டதன் மூலம், பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்கள் தூக்கிலிடப்படுவாா்கள் என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு இந்திய நீதித் துறை கூறியுள்ளது. இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ‘நிா்பயா’வின் ஆன்மா இப்போது சாந்தியடைந்திருக்கும் என நம்புகிறேன். இந்தத் தீா்ப்பு மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவா்களின் மனங்களில் பயம் உருவாகியிருக்கும்’ என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com