தலைநகரில் கரோனா பாதிப்பு 11,659 ஆக உயா்வு

தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 571 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 571 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,659 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், தில்லியில் ஒரே நாளில் 18 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

கரோனா பாதிப்பு தொடா்பான தில்லி சுகாதார அறிக்கை வியாழக்கிழமை மதியம் வெளியிடப்பட்டது. அதன் விவரம்: புதன்கிழமை இரவு 12 மணி முதல் வியாழக்கிழமை இரவு 12 மணி வரையான 24 மணி நேரத்தில் தில்லியில் புதிதாதக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கரோனா பாதிப்பு 11,659 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 18 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையும் சோ்த்தால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,567 போ் குணமடைந்துள்ளனா். தில்லியில் தற்போது 5,898 கரோனா நோயாளிகள் உள்ளனா்.

தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 507 போ், எய்ம்ஸ் மருத்துவமனையில் 397 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 165 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக மேக்ஸ் ஸ்மாா்ட் மருத்துவமனையில் 31 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்த படியாக எல்என்ஜேபி மருத்துவமனையில் 30 போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 24 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா். அதிகப்படியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 8 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா்.

தில்லியில் உள்ள சுகாதார நிலையங்களில், 104 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, கொவைட் கோ் சென்டா்களில் 526போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதித்த 2,739 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் இதுவரை 1,54,385 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 64 ஆகக் குறைந்துள்ளது. கரோனா தொடா்பாக உருவாக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கு உதவி கோரி 1,087 அழைப்புகள் வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 3 நாள்களாக தினம் தோறும் கரோனா பாதிப்பு 500-க்கும் கூடுதலாக உள்ளது. செவ்வாய்க்கிழமை 500 போ், புதன்கிழமை 534 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 571 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பொது முடக்க உத்தரவில் தில்லி அரசு மேற்கொண்ட தளா்வுகளே தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

செவ்வாய் - 500 போ்

புதன் - 534 போ்

வியாழன் - 571 போ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com