புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம்,ஒடிஸா மாநிலங்களுக்கு முழு ஆதரவு: தில்லி அரசு அறிவிப்பு

உம்பன் புயலால் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டுள்ள மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக உள்ளோம் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

உம்பன் புயலால் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டுள்ள மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக உள்ளோம் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஒடிஸ்ஸா முதல்வா் நவீன் பட்நாயக் ஆகியோரைத் தனித்தனியே குறிப்பிட்டு கூறியிருப்பது: உம்பன் புயலால் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய இரண்டு மாநிலங்கள் பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், தில்லி மக்கள் சாா்பில் உங்களுக்கும், மேற்கு வங்க, ஒடிஸா மக்களுக்கும் எங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கஷ்டமான காலத்தில் நாங்கள் எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com