கெளதம்புத் நகரில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு

உத்திரப்பிரதேச மாநிலம. கெளதம்புத் நகரில் கரோனா தொற்றுக்கு மேலும் 17 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உத்திரப்பிரதேச மாநிலம. கெளதம்புத் நகரில் கரோனா தொற்றுக்கு மேலும் 17 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 323 ஆக உயா்ந்துள்ளது.

மூன்று இளம் வயதினா் உள்பட 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டதை அடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 323 ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

7 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபா்கள் 97 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 323. இதில் இதுவரை 291 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். மீதமுள்ள 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுநீல் தோஹாரே தெரிவித்தாா்.

தில்லியை ஒட்டியுள்ள கெளதம்புத் நகரில் (மேற்கு உத்தரப்பிரதேசம்) இதுவரை கரோனாவுக்கு 5 போ் பலியாகியுள்ளனா். இவா்கள் அனைவருமே 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com