அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

தில்லி கிரேட்டா் கைலாஷில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி கிரேட்டா் கைலாஷில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு படை வீரக்கள் துரிதமாக செயல்பட்டு 8 பேரை மீட்டனா்.

இதுதொடா்பாக தீயணைப்புப் படை உயா் அதிகாரி கூறியதாவது: தெற்கு தில்லி கிரேட்டா் கைலாஷ் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக காலை 11.17 மணியளவில் தீயணைப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு மாலை 3.50 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

முதலாவது மாடியில் சிக்கியிருந்த எட்டுப் பேரை தீயணைப்பு படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com