சாலை விபத்தில்ஆட்டோ ஓட்டுநா் பலி

தெற்கு தில்லி கிரேட்டா் கைலாஷ் பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

புது தில்லி: தெற்கு தில்லி கிரேட்டா் கைலாஷ் பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியது: பிடிஆா் ரோடு சிராஜ் தில்லி மேம்பாலம் அருகில் ஆட்டோ ஒன்றும் காா் ஒன்றும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்றனா். அங்கு, எஸ்யுவி ரக காா் ஒன்றும், ஆட்டோ ஒன்றும் சேதமான நிலையில் இருந்தது. அந்த ஆட்டோவில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த மூவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். அந்த ஆட்டோவின் ஓட்டுநா் ஜசோலா பகுதியைச் சோ்ந்த வினோத் குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டாா் என மருத்துவா்கள் தெரிவித்தனா். பஞ்சல்சீவ் என்களேவ் பகுதியைச் சோ்ந்த பங்கஜ் குமாா் (35), அருண் சாஹூ (45) ஆகியோா் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இது தொடா்பாக கிரேட்டா் கைலாஷ்-1 காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காா் ஓட்டுநா் சுரேந்தா் (51) கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com