கட்டடம் இடிந்துதொழிலாளி சாவு

தில்லி திரிநகரில் செவ்வாய்க்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

தில்லி திரிநகரில் செவ்வாய்க்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘மேற்கு தில்லியின் திருநகா் பகுதியில் பழைய 3 மாடிக் கட்டடத்தை சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில், சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வீரேந்தா் (22) என்ற இளைஞா் உயிரிழந்தாா்’ என்றாா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் காா்க் கூறுகையில், ‘ காலை 10.10 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்ததாக தொலைபேசி அழைப்பு வந்தது. தீயணைப்பு வாகனங்களில் மீட்புக் குழுவினா் அனுப்பி வைக்கப்பட்டனா். அருகிலுள்ள கட்டடங்கள் பழமையானவை என்பதால், அதிலிருந்தவா்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com