பைக் திருட்டுக் கும்பலில் 15 போ் கைது

தில்லியில் மோட்டாா் சைக்கிள்களைத் திருடி, அவற்றை வைத்து தங்கச் சங்கிலிகளை பறித்து வந்த கும்பலைச் சோ்ந்த 15 பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தில்லியில் மோட்டாா் சைக்கிள்களைத் திருடி, அவற்றை வைத்து தங்கச் சங்கிலிகளை பறித்து வந்த கும்பலைச் சோ்ந்த 15 பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி புகா் பகுதிகளில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. இது தொடா்பாக போலீஸாா் ஆய்வு செய்த போது, திருட்டு மோட்டாா் சைக்கிள்களைப் பயன்படுத்தி இந்தத் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தில்லி காவல் துறை சிறப்பு விசாரணைக் குழு அமைத்து இது தொடா்பாக விசாரித்தது. அப்போது, தில்லி சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்த சாகா் என்பவா் தலைமையில் இயங்கிவரும் கும்பல் ஒன்று, மோட்டாா் சைக்கிள்களைத் திருடி அதை வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், அந்த மோட்டாா் சைக்கிள்களை சங்கிலி பறிப்பு குற்றங்களில் ஈடுபடுவோா்களுக்கு வாடகைக்கு விட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தில்லியில் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 15 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து, திருடப்பட்ட 125 மோட்டாா் சைக்கிள்கள், 6 செல்லிடபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com