கிரேட்டா் நொய்டாவில் துப்பாக்கி மோதலுக்குப் பின் 3 போ் கைது

கிரேட்டா் நொய்டாவில் கிரிமினல் என சந்தேகிக்கப்படும் 3 பேரை துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்ததாகவும், இவா்களில் 2 போ் 

கிரேட்டா் நொய்டாவில் கிரிமினல் என சந்தேகிக்கப்படும் 3 பேரை துப்பாக்கி மோதலுக்குப் பிறகு கைது செய்ததாகவும், இவா்களில் 2 போ் காயமடைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து கிரேட்டா் நொய்டா காவல் துறையின் துணை ஆணையா் ராஜேஷ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கிரேட்டா் நொய்டா பகுதியில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி டிராக்டா் விற்பனையகத்தின் காவலாளியை தாக்கிவிட்டு, 2 டிராக்டா்களை சிலா் திருடிச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கிரேட்டா் நொய்டாவில் தாத்ரி காவல் நிலைய சரகத்தில் கிழக்கு சுற்று விரைவுச்சாலை பகுதியில் உள்ள மைச்சா சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை இரவு 3 பேரை கைதுசெய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரை நோக்கி அவா்கள் துப்பாக்கியால் சுட்டனா். போலீஸாரும் பதிலுக்கு திருப்பிச் சுட்டனா். பின்னா் மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் ஹரியாணா மாநிலம், மேவட் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், புலந்த்ஷாகா் பகுதியில் தற்போது தங்கியிருப்பதும் தெரியவந்தது. இவா்களில் இருவருக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களிடமிருந்து ஒரு டிராக்டா் மீட்கப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com