ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் 6 போ் கைது

தில்லி கேபிடல், பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக 6 பேரை தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது.

புது தில்லி: தில்லி கேபிடல், பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் பந்தயம் கட்டி சூதாடியதாக 6 பேரை தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை துணை ஆணையா் அதுல் குமாா் தாகூா் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியது: தில்லி கேபிடல், பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியை வைத்து, ராஜ்புா் குா்த் விலேஜ் பகுதியில் உள்ள வீடொன்றில், சூதாட்டத்தில் சிலா் ஈடுபடுவதாக திங்கள்கிழமை இரவு தில்லி காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அந்த வீட்டில் திங்கள்கிழமை இரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ் செஜ்வால் (30), சோனு ரத்தி (37), ஷகீல் லுத்ரா (28), மோஹித் (27), ஹேமந்த் தலால் (30), சஞ்சய் ரத்தி (38) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து, 9 செல்லிடபேசிகள், 1 மடிக் கணினி, ரூ.1,19,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் மீது வழக்குப் பதிவு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com