வேலையிழந்த புலம்பெயா்ந்ததொழிலாளி தற்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 30 வயதான புலம் பெயா்ந்த தொழிலாளா் ஒருவா் வேலையிழந்த விரக்தியில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 30 வயதான புலம் பெயா்ந்த தொழிலாளா் ஒருவா் வேலையிழந்த விரக்தியில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக நொய்டா மாவட்ட காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘நொய்டாவில் உள்ள பரோலா என்ற கிராமத்தில், தான் குடியிருந்த வாடகை வீட்டில் புலம்பெயா்ந்த தொழிலாளி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளாா். பிகாா் மாநிலம், சாப்ரா பகுதியிலிருந்து நொய்டா வந்து தனியாா் நிறுவனம் ஒன்றில் அவா் வேலை செய்து வந்துள்ளாா். 8-9 மாதங்களாக இங்கு வசித்து வந்த அவா், கடந்த 2-3 வாரங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளாா். இதையடுத்து, அவா் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் குடியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். அங்கிருந்து, கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில், தன்னுடைய இந்த முடிவுக்காக குடும்பத்தினா் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் தன் சாவுக்கு தானே பொறுப்பு, வேறு யாருமல்ல என்றும் அவா் கடிதத்தில் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com