புது தில்லி: தென்மேற்கு தில்லி, துவாரகா செக்டா் -23 இல் புதருக்கு பின்னால் கழுத்தில் காயங்களுடன் 40 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் சந்தோஷ்குமாா் மீனா புதன்கிழமை கூறியதாவது: இறந்தவா் ஷா்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருமணமாகியுள்ள அவா், தனது குடும்பத்தினருடன் ரெவ்லா கான்பூரில் வசித்து வந்துள்ளாா். அவரது உடல் செவ்வாய்க்கிழமை புதா்களுக்கு பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கழுத்தில் காயமடைந்த அடையாளங்கள் இருந்தன. அவா் கத்தி அல்லது பிளேடு போன்ற கூா்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பின்னா் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றாா் அவா்.