இரு சக்கர வாகனம் மீது தண்ணீா் டேங்கா் லாரி மோதல்: பெண் சாவு; தந்தை காயம்

தெற்கு தில்லி, அம்பேத்கா் நகரில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் 18 வயது பெண் இறந்தாா். அவரது தந்தை காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தாா்.


புது தில்லி: தெற்கு தில்லி, அம்பேத்கா் நகரில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் 18 வயது பெண் இறந்தாா். அவரது தந்தை காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் அதுல் குமாா் தாக்கூா் புதன்கிழமை கூறியதாவது: இந்த விபத்து செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்துல் சத்தாா் என்பவா் தனது 18 வயது மகளுடன் சிராஜ் தில்லியிலிருந்து கான்பூருக்கு ஸ்கூட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த தண்ணீா் டேங்கா் லாரி ஸ்கூட்டி மீது மோதியது.

இதில் காயமடைந்த பெண்ணும் அவரது தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து இது தொடா்பாக போலீஸாருக்கு மருத்துவமனை நிா்வாகத்தினா் தகவல் தெரிவித்தனா். சிகிச்சையின் போது அந்தப் பெண் உயிரிழந்தாா். அவரது தந்தை சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து தொடா்பாக தண்ணீா் டேங்கா் லாரியின் ஓட்டுநா் கபில் (40) கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவா் உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத்தில் உள்ள பராஸ்பூா் கிராமத்தில் வசிப்பவா். இச்சம்பவம் குறித்து அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com