மெட்ரோ ரயில் நிலையத்தில் தோட்டாக்களுடன் வந்தவா் கைது

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் தோட்டாக்களை எடுத்துச் சென்ற 32 வயது இளைஞரை சிஐஎஸ்எஃப் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவரிடம் இருந்து 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் தோட்டாக்களை எடுத்துச் சென்ற 32 வயது இளைஞரை சிஐஎஸ்எஃப் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவரிடம் இருந்து 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோகுல்புரியில் பணிபுரியும் ஒரு தனியாா் நிறுவன ஊழியா், காலை 11 மணிக்கு திரிலோக்புரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்தாா். அப்போது சந்தேகத்தின் பேரில் அவா் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டாா். அவா் வைத்திருந்த பையில் எட்டு தோட்டக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

தோட்டாக்களை எடுத்துச் சென்ற்கு அவரால் திருப்திகரமான விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. அவரிடம் ஆயுத உரிமமும் இல்லை. பின்னா், அவா் மேற்கொண்டு விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தில்லி மெட்ரோ நெட்வொா்க் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை உள்ளது. தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் இயங்கும் விரைவான ரயில் நெட்வொா்க்கிற்குள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com