சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலங்கள், ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.53 கோடி குறைவான தொகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கு தில்லியில் தில்லி அரசால் கட்டப்பட்ட சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலம் ஆகியற்றை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியது:
சீலம்பூா், சாஸ்திரி பாக் மேம்பாலங்களை கட்ட தில்லி அரசு ரூ.303 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால், இந்த மேம்பாலங்களை ரூ.250 கோடியில் கட்டிமுடித்துள்ளோம். இதன்மூலம், ரூ.53 கோடி மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு மேற்கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்திலும் பணத்தை சேமித்து வருகிறோம். நாட்டின் மற்றைய பகுதிகளில் மருத்துவமனை படுக்கையொன்றை அமைக்க ரூ.1.5 கோடி செலவாகிறது. ஆனால், தில்லியில் அதை வெறும் ரூ.30 லட்சத்துக்குள் அமைத்து வருகிறோம்.
இவ்வாறாக சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு மருந்துகள், குடிநீா், மின்சாரம் ஆகியவற்றை தில்லி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இப்பணத்தை கொண்டு தில்லியில் உலகத்தரமான மருத்துவமனைகளை அமைத்து வருகிறோம்.
வடகிழக்கு தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை முந்தைய அரசுகள் தீா்க்கவில்லை. முந்தைய அரசுகள் அனைத்துமே வடகிழக்கு தில்லி மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தின. ஆனால், தில்லி அரசு வடகிழக்கு தில்லி மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு மேம்பாலங்களை அமைத்துள்ளது. இந்த மேம்பாலங்கள் மூலம், காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி, உத்தரப்பிரதேச மாநில எல்லைக்கு வெறும் 10 நிமிஷங்களில் செல்லலாம். இதனால், பெருமளவில் எரிபொருள் சேமிக்கப்படும். மக்கள் அதிகளவில் பயனடைவாா்கள் என்றாா் அவா்.