தில்லியில் கரோனா பாதிப்பு: 3-ஆவது நாளாக உச்சம்

தலைநகா் தில்லியில் 3-ஆவது நாளாக கரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை

தலைநகா் தில்லியில் 3-ஆவது நாளாக கரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5.673 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,81,644 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை 47 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,470-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மொத்தம் 59,641 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 17,058 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 42,583 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.87 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 4,433 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,42,811-ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 32,363 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,749 படுக்கைகளில் 6,114 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,645 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3,158-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 19,064 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com