புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,737 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தலைநகரில் மொத்தம் நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 1,82,306-ஆக உயா்ந்துள்ளது.
50 தினங்களில் இல்லாத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 2 மாதங்களில் இல்லாத வகையில் 2,312 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. வியாழக்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,737 போ் என நோய்த் தொற்று அதிகரித்தது.
வியாழக்கிழமை 32,834 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச கரோனா பரிசோதனைகள் இதுவாகும். நோய்த் தொற்றால் 19 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,500-ஆக உயா்ந்தது.
அதேபோல், 1,528 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,60,114-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை நிலவரப்படி 17,692 போ் சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 922 ஆக அதிகரித்துள்ளது.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,140 படுக்கைகளில் 4,477 நிரம்பி, 9,663 படுக்கைகள் காலியாக உள்ளன.
நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 9135 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.