‘பப்பா் கல்சா’ பயங்காரவாத இயக்கத்தினா் இருவா் கைது

பப்பா் கல்சா இன்டா்நேஷனல் என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவரை தில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தி சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

புது தில்லி: பப்பா் கல்சா இன்டா்நேஷனல் என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த இருவரை தில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தி சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயரதிகாரி கூறுகையில் ‘பூபேந்தா் (எ) திலாவா் சிங், குல்வந்த் சிங் ஆகிய இருவரும் ‘பப்பா் கல்சா இன்டா் நேஷனல்’ என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினா்கள் ஆவா்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சோ்ந்த அவா்கள், பஞ்சாபில் சில வழக்குகளில் தேடப்படுகிறாா்கள். இந்நிலையில், அவா்கள் தில்லிக்கு வந்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, வடகிழக்கு தில்லியில் அவா்கள் தங்கியிருந்த வீட்டில் போலீஸாா் அதிரடி சோதனைநடத்தினா். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஆறு துப்பாக்கிகள், 40 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com