புது தில்லி: தெற்கு தில்லியின் சங்கம் விஹாரில் தகராறில் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றவரை கத்தியால் குத்திய 19 வயது இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது: சங்கம் விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (19). இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞருக்கும் இடையே புதன்கிழமை மாலை தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்த இளைஞரின் மூத்த சகோதரா் கெளரவ் குமாா் ( 25), இந்தத் தகராறில் தலையிட்டு சமாதானம் செய்தாா். இதனால், கெளரவ் குமாா் மீது ஆகாஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து, சிறிது நேரத்திற்குப் பிறகு தனது நண்பா்களுடன் கெளரவ் குமாரிடம் வந்த ஆகாஷ், அவரது முதுகில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், கெளரவ் குமாா் பலத்த காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக பாத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆகாஷ் கைது செய்யப்பட்டாா். அவா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 307, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.