புது தில்லி: தில்லி புறநகா்ப் பகுதியான முண்ட்காவில் உள்ள பக்கா்வாலாவில் தொழிலாளா் முகாமில் வியாழக்கிழமை 21 வயது பெண் ஒருவா் தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்த கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். தலைமறைவாகியுள்ள கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: அந்தப் பெண் ஷபிலா கட்டூன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அந்தப் பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவரது கணவா் மஜித் (21) தலைமறைவாகிவிட்டாா். முதல்கட்ட விசாரணையின் போது, திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக கணவா் சந்தேகித்துள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இச்சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள பெண்ணின் கணவரைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.