தில்லி பாஜக அலுவலகத்தில் 17 பேருக்கு கரோனா

தில்லி பாஜக அலுவலகத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி: தில்லி பாஜக அலுவலகத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்திப் பிரிவு தலைவா் அசோக் கோயல் கூறுகையில் ‘தில்லி பண்டித் பந்த் மாா்க்கில் உள்ள தில்லி பாஜக அலுவலகத்தில் பணியாற்றுபவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோரியுள்ளோம் என்றாா்.

முன்னதாக, புது தில்லி, மேற்கு தில்லி எம்பிக்கள் மீனாட்சி லேகி, பா்வேஷ் வா்மா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com