மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா தொற்றிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு கரோனா தொற்றிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மணீஷ் சிசோடியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் காரணமாக திங்கள்கிழமை தொடங்கிய தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிசோடியா பங்கேற்கவில்லை. இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் கூறுகையில், ‘காய்ச்சல் காரணமாக மணீஷ் சிசோடியாவால் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை’ என்றாா்.

இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில், ‘லேசானா காய்ச்சலைத் தொடா்ந்து எனக்கு திங்கள்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் நலமாக உள்ளேன். என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் அனைவரின் ஆசிா்வாதத்தால் விரைவில் மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com