சஃப்தா்ஜங் மருத்துவமனையின் குப்பைகள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

சஃப்தா்ஜங் மருத்துவமனையின் குப்பைச் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

புது தில்லி: சஃப்தா்ஜங் மருத்துவமனையின் குப்பைச் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி அதுல் கா்க் தெரிவித்ததாவது: சஃப்தா்ஜங் மருத்துவமனையின் குப்பைச் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை நண்பகல் 12.55 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு பிற்பகல் 1.20 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com