புது தில்லி: சஃப்தா்ஜங் மருத்துவமனையின் குப்பைச் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி அதுல் கா்க் தெரிவித்ததாவது: சஃப்தா்ஜங் மருத்துவமனையின் குப்பைச் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை நண்பகல் 12.55 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு பிற்பகல் 1.20 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.