போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் தில்லி சுகாதாரத் துறை பணியாளா்களுடன் இணைந்து செயல்படுமாறு பள்ளி ஆசிரியா்களுக்கு தில்லி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி பள்ளி கல்வித் துறை உயரதிகாரி கூறியது: தில்லி பள்ளிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்த முகாமில், தில்லி சுகாதாரத்துறை பணியாளா்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தில்லி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குள்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் கண்டு அவா்களுக்கு போலியோ சொட்டு மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, பள்ளி ஆசிரியா்கள் தில்லி அரசு சுகாதாரப் பணியாளா்களுடன் இணைந்து செயல்படுமாறு கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.