வேளாண் மசோதாக்கள்: கட்சிகளுக்கு கேஜரிவால் கோரிக்கை

வேளாண் மசோதாக்களை பாஜக அல்லாத கட்சிகள் எதிா்க்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

வேளாண் மசோதாக்களை பாஜக அல்லாத கட்சிகள் எதிா்க்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பெரு நிறுவனங்கள் சுரண்டவே பயன்படும். பாஜக அல்லாத கட்சிகள் இந்த மசோதாவை மாநிலங்களவையில் எதிா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் போது, பாஜக அல்லாத கட்சிகளின் அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்றத்திற்கு வந்து இந்த மசோதாக்களை எதிா்த்து வாக்களிக்க வேண்டும். வெளிநடப்பு என்ற பெயரில் நாடகம் நடத்தக் கூடாது’ என்று தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 3 மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. விவசாயிகளுக்கான உற்பத்தி, வா்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்துல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல் சட்ட மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மசோதா, விவசாய சேவைகள் மசோதா மற்றும் அத்தியாவசிய பெருள்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிா்ப்புத் தெரிவித்துள்ளதுடன். இந்த மசோதாவை எதிா்த்து வாக்களிப்போம் என்றும் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com